https://ift.tt/2P672H1

தென்காசியில் கரோனா பரிசோதனை செய்யாதவருக்கு பாசிட்டிவ் என்றும், இறந்து 7 மாதம் ஆனவருக்கு நெகட்டிவ் என்றும் முடிவு வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவர், குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இவரதுசெல்போன் எண்ணுக்கு கரோனா கட்டுப்பாட்டுமையத்தில் இருந்து தொலைபேசி குறுந்தகவல் வந்துள்ளது. அதில், இவரது தந்தை அந்தோணிராஜுக்கு கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்றும், மனைவி ஜென்ஸிக்கு பாசிட்டிவ் என்றும் ரிசல்ட் வந்திருப்பதாக இருந்தது. தந்தை இறந்து 7 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அவருக்கு கரோனா நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eggnEY

Post a Comment

0 Comments