
மதுராந்தகம் அருகேயுள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் பல நாடுகளில் இருந்து 26 வகையான பறவைகள் வருகின்றன. இவ்வாறுவரும் பறவைகள் இங்கு தங்கிமுட்டையிட்டு, குஞ்சு பொறிக்கின்றன. இனப்பெருக்க காலம் முடிந்து மே, ஜூன் மாதங்களில் இவை திரும்பிச் செல்லும்.
கடந்த 2 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் ஏரி வற்றியதால், பறவைகள் வரத்து குறைந்தது. கரோனா பரவல் எதிரொலியாக ஓராண்டுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பறவைகள் சரணாலயம், கடந்த ஜனவரி 10-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3v4xjoy
0 Comments