
சின்னகொத்தூரில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோயிலை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியை வரலாற்று ஆர்வலர்களுடன் இணைந்து கிராம மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னகொத்தூரில் முதலாம் குலோத்துங்கனால் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோயில் உள்ளது. இதுபிற்கால சோழர்கள் காலத்திய கட்டிட கலை அமைப்பாகும். இந்த ஊர் ஒய்சால மன்னன் வீர ராமநாதனின் குந்தாணி ராஜ்ஜியத்தின் தலைநகராக இருந்து உள்ளது. இக்கோயிலில் படிஎடுக்கப்பட்ட 15 கல்வெட்டுக்கள் மூலம் கோயிலின் சிறப்பினை நமக்கு தெரிவிக்கிறது. தற்போது, வரலாற்று ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் ஆகியோருடன் கிராம மக்கள் இணைந்து பழமையான இக்கோயிலை புனரமைக்கும் பணியை மேற் கொண்டு வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3u2H8Db
0 Comments