
புதுச்சேரியில் கரோனா தடுப்புக்காக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. அதன்படி முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.100 அபராதம் வசூலிக்கப்பட்டது. தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
நாடு முழுவதும் கரோனா தாக்கத்தின் 2-வது அலை பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்குகள், புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் புதிய விதிமுறைகளை வகுத்துள்ள அம்மாநில அரசு, இதை மீறினால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என பொதுமக்களை எச்சரித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3g20xjE
0 Comments