
கரோனா இரண்டாம் அலைதமிழகத்தில் தீவிரமாக பரவி வரும்நிலையில், வேலைக்காக வந்து தங்கியுள்ள வட மாநிலத் தொழிலாளர்கள் திருப்பூரில் தொடர்ந்து தங்குவதா அல்லது சொந்த ஊர்களுக்கு செல்வதா என்ற குழப்பமான மனநிலையில் இருப்பதாகதெரிவித்துள்ளனர்.
திருப்பூரில் வாழும் 65 சதவீதம்பேர் நம்பி இருக்கும் தொழில் பின்னலாடை. இதில் பணிபுரிபவர்களில் மூன்றில் ஒரு பங்கு வகிப்பவர்கள் வடமாநிலத் தொழிலாளர்கள். இந்த எண்ணிக்கை ஒன்றரை லட்சம் தொடங்கி 2 லட்சத்துக்குள் அடங்கும் என்கின்றனர் தொழிற்சங்கத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3a6vQ9m
0 Comments