https://ift.tt/3ny8EpT

ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நாட்களில் மதுரையில் பழ வியாபாரம் களைகட்டும். விழாவுக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள், வீடு திரும்பும்போது பழங்களை வாங்கிச் செல்வார்கள். குறிப்பாக பலாப்பழங்களுக்கு இந்த விழா நேரத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

ஆனால் இந்த ஆண்டு பக்தர்கள் இல்லாமல் சித்திரைத் திருவிழா கோயில் வளாகங்களில் உள்விழாவாக நடத்தப்பட்டு வருவ தால் பழ வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். புதுக்கோட்டை, பண்ருட்டி, சிறுமலை மற்றும் கேரளாவில் இருந்து மதுரைக்கு பலாப் பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு யானைக்கல் பகுதியில் விற்பனை நடைபெறும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3aQuvUn

Post a Comment

0 Comments