
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிரபல துணிக்கடையின் பணியாளர்கள் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அதே பகுதியில் உள்ள அந்தக் கடையின் தங்கும் விடுதியை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மூடி சீல் வைத்தனர்.
சென்னை மாநகராட்சி சார்பில் கரோனா பரவலை கட்டுப்படுத்த, தினமும் 10 ஆயிரத்துக்கு குறையாத அளவில் பரிசோதனைகளை செய்து வந்தது. குறிப்பாக, பெரிய வணிக வளாகங்கள், துணிக்கடைகள், கோயம்பேடு சந்தை போன்ற பகுதிகளில் 2 வாரங்களுக்கு ஒருமுறை பணியாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3sxXpP8
0 Comments