
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள விவசாயிகளிடையே தொடர்ந்து எதிர்ப்பு நீடிக்கிறது. இந்நிலையில், திட்டத்தை உடனே தொடங்க வேண்டுமென சில அமைப்பினர் அழுத்தம் கொடுப்பதால் விவசாயிகள் குழப்பமடைந்துள்ளனர்.
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர், கீழ்பவானி வாய்க்கால் மூலம் பயணித்து நேரடியாக 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது. இத்துடன் கீழ்பவானி வாய்க்கால் கசிவுநீர் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுவதுடன், சுற்றுவட்டாரத்தில் உள்ள குளம், குட்டைகளுக்கும் நீர் கிடைத்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2P9pYVy
0 Comments