https://ift.tt/3tiNjCK

கரோனா 2-வது அலை பரவல் காரணமாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களை தக்கவைத்துக் கொள்ள கட்டுமானத் துறையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா தொற்று காரணமாக பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் தமிழகத்தில் கட்டுமானத் தொழில், ஓட்டல் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய லட்சக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். பேருந்து, ரயில் போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் பலரும் நடந்தே சென்றனர். இதனால் பெரும் சிரமத்துக்கு ஆளான வடமாநிலத் தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊரிலேயே வேலை செய்து வருவாய் ஈட்டினர். இதனால் தமிழகத்தில் கட்டுமானத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3e3XTXQ

Post a Comment

0 Comments