
கோவையில் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்களைத் தாக்கியஉதவி ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம், கோவை காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவை காந்திபுரம், மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் சாஸ்திரி சாலையைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான உணவகம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஓசூரைச் சேர்ந்த பெண்கள் உட்பட 5 பேர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். உணவகத்தின் ஷட்டர் பாதி இறக்கிவிடப்பட்டு இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dUhgms
0 Comments