https://ift.tt/3uVawLP

பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 6 ஆண்டுகளாக மூடப் படாத வடிகால் வாய்க்காலால் அப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

பண்ருட்டி நகராட்சி 26-வது வார்டில் தீர்த்தா சீனுவாசன் சாலையும், பிள்ளையார் கோயில் சாலையும் சந்திக்கும் இடத்தில் வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வடிகால் வாய்க்கால் நடுவில்4 அடி அகலத்திற்கு மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் சாலை வழியாக இருசக் கர வாகனங்கள் மட்டுமே செல்லும் நிலை உள்ளது. கார் உள் ளிட்ட சரக்கு வாகனங்கள் செல்லமுடியாத நிலை இருப்பதாகவும், இரவு நேரங்களில் பைக்கில் செல்வோர் வடிகால் இருப்பதைஅறியாமல் விழுந்து விபத்துக் குள்ளாவதும் தொடர்கதையாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32lcr06

Post a Comment

0 Comments