https://ift.tt/3wHaby7

சென்னையில் நாளுக்கு நாள் கரோனா அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த 15 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் மண்டலக் குழுக்களை தமிழக அரசுஅமைத்துள்ளது. அக்குழுக்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தலைமையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தினமும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 150-க்கும் கீழ் குறைந்திருந்தது. அடுத்த 45 நாட்களில் தினமும் 1,500 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைக் கட்டுப்படுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கு தலா 1 குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கள் நாளைமுதல் களத்தில் பணியை தொடங்குகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rZB64E

Post a Comment

0 Comments