விளையாட்டாய் சில கதைகள்: கங்குலியின் கலாட்டா கல்யாணம்

பெற்றோருக்குத் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்துகொண்டு, அதை அவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளும் ஜோடிகளை சினிமாவில்தான் பார்த்திருப்போம். ஆனால் நிஜத்திலும் அப்படி நடந்துள்ளது. நடத்திக் காட்டியவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய கிரிக்கெட் வாரியத் தலைவருமான சவுரவ் கங்குலி.

கொல்கத்தாவின் பணக்கார குடும்பம் ஒன்றில் பிறந்தவர் கங்குலி. அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த டோனாவுக்கும் இடையே சிறு வயதிலேயே காதல் பிறந்துள்ளது. இந்த பரஸ்பர காதலுக்கு என்ன காரணம் என்று இருவருக்கும் புரிந்ததில்லை. ஆனால் அடிக்கடி ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருக்க முடிந்ததில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments