
கிரிக்கெட் பேட்கள் (மட்டைகள்) பெரும்பாலும், ‘வில்லோ’ என்ற மரத்தில் இருந்து செய்யப்படுகின்றன. இந்தச் சூழலில் வில்லோ மரத்துக்கு பதிலாக மூங்கில்களில் கிரிக்கெட் பேட்களை செய்யலாம் என்ற ஆலோசனை எழுந்துள்ளது. இங்கிலாந்தின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவரும், 19 வயதுக்கு உட்பட்ட தாய்லாந்து கிரிக்கெட் அணியின் வீரராக இருந்தவருமான டாக்டர் தர்சில் ஷா என்பவர் சமீபத்தில் தாக்கல் செய்துள்ள ஆய்வறிக்கையில் இதுபற்றி தெரிவித்துள்ளார்.
“மூங்கிலால் செய்யப்பட்ட கிரிக்கெட் பேட்கள், தூக்குவதற்கு எளிதாக இருக்கும். இதை பேட்ஸ்மேன்கள் எளிதாக சுழற்றலாம். இந்த வகை பேட்களை வைத்து ஸ்வீப்பிங் ஷாட்களை எளிதாக அடிக்கலாம். இதில் அடிக்கும் பந்துகள் வேகமாக பவுண்டரியை நோக்கி நகரும்” என்று தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார் தர்சில் ஷா.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments