
கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், திருமணி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் திருமணி கிராமத்தில் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு எச்பிஎல் நிறுவனம் மூலம் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலை அமைக்க முடிவுசெய்தது. இத்திட்டத்துக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு `தேசிய முக்கியத்துவ திட்டம்' என்று ஒப்புதல் அளித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3etuRSW
0 Comments