
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்றுமுதல் அமலான முழு ஊரடங்குக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர். சாலைகள் வெறிச்சோடியிருந்தன.
திருநெல்வேலி மாவட்டத்தில் பேருந்துகளும், ஆட்டோ, கார், வேன், மினி லாரிகளும் இயக்கப்படவில்லை. அரசு ஊழியர்கள் மற்றும் சீருடைப் பணியாளர்கள் பணிக்குசெல்ல மட்டும் குறிப்பிட்ட வழித்தடங்களில் காலையும், மாலையும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hhIlTG
0 Comments