
தஞ்சாவூரில் நேற்று முன்தினம் இரவு காற்றுடன் பெய்த கனமழையால், 50 ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. இதனால்,விவசாயிகள் வேதனைஅடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு காற்றுடன் கூடிய கோடை மழை பெய்தது. இந்த மழை காரணமாக திருவையாறு, நடுக்கடை, திருக்காட்டுப்பள்ளி, குலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yrSdAm
0 Comments