
கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் இன்று(மே 24) முதல் ஒரு வாரத்துக்குஎவ்வித தளர்வும் இல்லாமல்முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள், அனைத்துக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் குழுவுடனும் முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அதையடுத்து, தமிழகம் முழுவதும் 24-ம் தேதி (இன்று) முதல் ஒரு வாரத்துக்கு எவ்வித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wkRM9k
0 Comments