
சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியுள்ள நிலையில், திருச்சி மேற்குத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு வெற்றி பெற்றதாகவும், அவருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும், திருச்சி மாநகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில், திருச்சி மேற்குத் தொகுதி அனைவராலும் உற்று நோக்கப்படும் தொகுதியாக உள்ளது. ஏனெனில், இந்தத் தொகுதியில் திமுகவின் முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மீண்டும் போட்டியிட்டார். அதிமுக சார்பில் வி.பத்மநாதன் போட்டியிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ecGXjw
0 Comments