
கோவை, திருப்பூர் மாவட்டங்கள் தென்னை உற்பத்தியில் அகில இந்திய அளவில் முதலிடம் வகிக்கின்றன. தேங்காய் மற்றும் இளநீர் தேவைக்காக மட்டுமே தென்னை மரங்கள் என்ற நிலை காலப்போக்கில் மாறியுள்ளது. இதற்கு, இதன் மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதுதான் காரணம்.
தென்னை மட்டையில் இருந்து தென்னை நார் உறித்தெடுக்கப்பட்டு கயிறு திரிக்கப்படுகிறது. அதன் தூள் செங்கல் வடிவில் கட்டிகளாக மாற்றப்பட்டு, மண் இல்லாத விவசாய தேவைக்காக ஏற்றுமதியாகிறது. தென்னஞ்சோகை தடுக்கு பின்னவும், வீடு, தொழிற்சாலைகளில் கூட்டி பெருக்க பயன்படும் சீமார் தயாரிக்கவும் பயன்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tGgSgV
0 Comments