
தமிழகத்தில் நாளை முதல் ஒரு வாரத்துக்கு தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று பிற்பகல் முதல் மளிகை மற்றும் காய்கறிக் கடைகளில் பொருட்களை வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
ஊரடங்கு தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், 24-ம் தேதி (நாளை) முதல் ஒரு வாரத்துக்கு தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் அனைத்தும் மூடப்படும். அரசு தோட்டக்கலைத் துறை மூலமாக காய்கறி, பழங்கள் வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யப்படும் என்று அறிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fHWJCg
0 Comments