https://ift.tt/34a0wmK

தமிழகத்தில் கரோனா இல்லாத 4 ஆயிரம் பேருக்கு தொற்று இருப்பதாக பதிவேற்றம் செய்யப்பட்டதற்கு தொழில்நுட்ப கோளாறுதான் காரணம் என்று தனியார் ஆய்வகம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் 69 அரசு மருத்துவமனைகள், 198 தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை (ஆர்டி
பிசிஆர்) செய்யப்படுகிறது. இந்த நிலையில், ‘மெட் ஆல்’ என்ற தனியார் ஆய்வகம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை, தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இணையதளத்தில் தவறாக பதிவேற்றம் செய்தது. தமிழகத்தில் கரோனா இல்லாத 4 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதாக தவறான விவரங்களையும் பதிவேற்றம் செய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2T6MhMZ

Post a Comment

0 Comments