
திருப்பூர் மாவட்டம், உடுமலை-தளி சாலையில் கடந்த 1954-ம் ஆண்டு அரசு கிளை நூலகம் எண் 1 தொடங்கப்பட்டது. இந்நூலகத்தில் பணியாற்றும் பணியாளர்களின் பல்வேறு செயல்பாடுகளால் மாவட்டத்திலேயே சிறந்த நூலகமாக தேர்வு செய்யப்பட்டு, விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உடுமலை கிளை நூலகத்தை மாதிரி நூலகமாக மாற்ற வேண்டி, ரூ.50 லட்சம் நிதியை அரசு ஒதுக்கியது.
இத்திட்டத்தின்படி யுபிஎஸ்சி தேர்வுக்கான நூல்கள், குளிரூட்டப்பட்ட இணையதளப் பிரிவு, மாற்றுத்திறனாளிகளுக்கான பிரைலி நூல்கள், குழந்தைகள்(விளையாட்டு உபகரணங்களுடன்), பெண்களுக்கென தனித்தனி பிரிவுகள், நகல் எடுக்கும்வசதி, பார்கோடு அடங்கிய நூல்கள் என பல்வேறு அடிப்படை வசதிகள் இதன் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டது. உடுமலையில் ஆமை வேகத்தில் தொடங்கிய இத்திட்டப்பணிகள், 2020-ல்கரோனா பரவல் காரணமாக பாதியில் கைவிடப்பட்டன. இதுவரை பணிகள் நடைபெறவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Stkfej
0 Comments