https://ift.tt/3bWJKM3

கடந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை பாசனத்துக்காகத் திறக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை மே 18-ம் தேதி அப்போதைய முதல்வர் பழனிசாமி வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியான நாளில் அணையில் சுமார் 65 டி.எம்.சி. நீர் இருப்பு இருந்தது. அதேபோல் இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு அணையை திறக்கும் வகையில் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 97 அடியாக இருந்தது.

அணையில் சுமார் 62 டி.எம்.சி. நீர் இருப்பில் உள்ளது. ஆகவே, மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக வெளியிட வேண்டும் என்று டெல்டா விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oUau4X

Post a Comment

0 Comments