
தமிழகத்தில் புதிய ஆட்சி அமையும்போதெல்லாம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர், அமைச்சர்களுக்கு பெயர் பலகை எழுதும் பணியில் முதியவர் ஒருவர் 32 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. வரும் 7-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர் அலுவலகங்களில் சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு பகுதியில் அனைத்துத் துறை அமைச்சர்களின் பெயர் பலகைகளாக குவிந்து கிடந்தன. அங்கு முதியவர் ஒருவர் அவற்றில் உள்ள பெயர்களை நீக்கி, அந்த பெயர் பலகைகளை தயார் செய்து கொண்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2RkDLt9
0 Comments