
இரண்டு மாதங்களாக தொடர்ந்து தக்காளி குறைந்த விலைக்கு விற்பனையாவதால் தக்காளி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாத இறுதி வாரம் தொடங்கி தற்போது வரை தக்காளிக்கு கட்டுப்படி ஆகும் விலை கிடைக்கவில்லை. எனவே, தக்காளி விவசாயிகள் மிக வேதனை அடைந்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கு மேலாக மிகக் குறைந்த விலையில் தக்காளி விற்பனையாவதால் பல இடங்களில் அறுவடை செய்யப்பட்ட தக்காளியை சாலையோரங்களிலும், ஏரி, குளம் போன்ற இடங்களிலும் விவசாயிகள் பலர் கொட்டிச் செல்லும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xMS9Ln
0 Comments