
ஆரணியில் அம்மா உணவக பெயர் பலகை அகற்றப்பட்டதற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு மீண்டும் வைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி புதிய பேருந்து நிலையம் அருகே அம்மா உணவகம் செயல்படுகிறது. இந்நிலையில், அம்மா உணவக பெயர் பலகையை கடந்த 6-ம் தேதி இரவு அகற்றப்பட்டுள்ளது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு, அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள், அம்மா உணவக பெயர் பலகையை ஆளுங்கட்சியினர் அகற்றிவிட்டதாக குற்றஞ் சாட்டினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uyVUSH
0 Comments