
சென்னையில் கரோனா தொற்றால் அதிகம் பேர் உயிரிழப்பதால், மயானங்களுக்கு வரும் சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அங்கு பணியாற்றும் மாநகராட்சி மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் மிகுந்த வேலைப் பளு மற்றும் மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சென்னையில் தற்போது 68 இடங்களில் மயானங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள மயானம் தவிர மற்ற இடங்களில் உள்ள மயானங்களில் நவீன தகன மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை தற்போது தனியாரின் பராமரிப்பில் உள்ளன. அந்த மயானங்களில் அனைத்து உடல்களும் இலவசமாக எரியூட்டப்பட்டு வருகின்றன. ஒரு உடலை தகனம் செய்ய மாநகராட்சி ரூ.750 செலுத்துகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uRyDLL
0 Comments