
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் வழங்கப்பட்ட கரோணா நிவாரணப் பொருட்களை சுகாதாரத்துறையிடம் ஒப்படைக் கும் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்ற ஆளுநர் தமிழிசை, செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘‘சிஐஐ கூட்டமைப்பு சார்பில் கரோனாவுக்குதேவையான மருந்துகள், கையுறைகள், முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு என் பாராட்டுக்கள். இதுபோல் பலரும் கொடுக்க முன்வரும்போது கரோனாவில் இருந்து மக்களை அதிகளவில் பாதுகாக்க முடியும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fvD5ti
0 Comments