
தமிழகத்தில் முழு ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.இதையொட்டி, மாநிலம் முழுவதும் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து, போலீஸார் கண்காணித்து வருகின்றனர். முன்களப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைப் பணியாளர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். பால் விநியோகம் மட்டும் தடையின்றி நடந்து வருகிறது.
அவசரத் தேவைகளுக்காக செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், இ-பதிவு செய்த வாகன ஓட்டிகளுக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களின் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து, அபராதம் விதித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vD2CYt
0 Comments