
திருப்பூரில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை இன்று தொடங்கி வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்றும் நாளையும் சேலம், திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் கரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்கிறார்.
மே 1-ம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், தமிழகத்தில் அதற்கான தடுப்பூசி வந்து சேராத நிலையில், இந்த திட்டம் தமிழகத்தில் தொடங்கவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2T59i35
0 Comments