
கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் கடும் போட்டிக்கு மத்தியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி பெற்றுள்ளார். குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதியில் கூடுதலாக கிடைத்த வாக்குகள் அவரது வெற்றிக்கு கைகொடுத்துள்ளது.
கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் ஆகியோர் இடையே பலத்த போட்டி நிலவியது. 1,37,950 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வசந்த் பெற்றி பெற்றார். ஆனால் கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணிக்குகிடைத்த வாக்குகளை இந்தமுறை பெறமுடியவில்லையே என்ற ஆதங்கம் காங்கிரஸ் கட்சியினரிடையே உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3h2xVY3
0 Comments