https://ift.tt/3vyW8JX

கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அரசு மருத்துவமனையின் பிணவறையிலிருந்து அனுப்புவதற்கு லஞ்சம் பெறுவது கண்டறியப்பட்டால், தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளான ஏராளமானோர், திருப்பூர்மாவட்ட அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் சிகிச்சைக்காக வருகிறார்கள். இவர்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இறந்தவர்களின் சடலங்களை பிணவறையில் வைத்து, அங்கிருந்து மின் மயானத்துக்கு அனுப்புவதற்கு ரூ.6 ஆயிரம் வரை சிலர் லஞ்சம் கேட்பதாக, பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vEVz1j

Post a Comment

0 Comments