
ஈரோடு திண்டலில் ‘லிட்டில்சிஸ்டர்ஸ்’ எனும் முதியோர் இல்லம் கிறிஸ்தவ அமைப்பினரால் நடத்தப்படுகிறது. 50 முதியவர்கள் தங்கியுள்ள இங்கு கரோனாபரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 15 பேருக்கு தொற்று உறுதியானது. இதில், ஆண்டாள்(75)எனும் மூதாட்டி, இல்லத்திலேயேதனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இவரின்உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 26-ம் தேதி உயிரிழந்தார்.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக இல்லத்தில் சமையல் பணியில் இருந்த ஆண்கள் தங்களது ஊர்களுக்குச் சென்று விட்ட நிலையில், ஆண்டாளின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் முதியோர் இல்ல நிர்வாகிகள் தவித்துள்ளனர். அப்போது முதியோருக்கு உணவு வழங்குவதற்காகச் சென்ற ‘உணர்வுகள்’ அமைப்பின் தலைவர் மக்கள்ராஜனிடம் இதைத் தெரிவித்துள்ளனர். இந்து மதத்தைச் சேர்ந்த ஆண்டாளுக்கு, இந்து முறைப்படி சடங்குகள் செய்து எரியூட்ட வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3c0N8pl
0 Comments