
நாட்டில் தமிழகம் உள்ளிட்ட பலமாநிலங்களில் கரோனா பாதிப்பும் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலாம் அலையில் தப்பித்த நம் தேசம், இரண்டாம் அலையில்சிக்கி ‘மூச்சுவிட’ திணறிக் கொண்டிருக்கிறது. அதேநேரம் முதல் அலையில் அதிகபாதிப்பை எதிர்கொண்ட உலக நாடுகள்பலவும் இரண்டாம் அலையில் விழித்துக்கொண்டன. முக்கியமாக, சீனா, தென்கொரியா போன்ற நாடுகள் ‘டி3’ சூத்திரத்தைப் பயன்படுத்தி முதல் அலையைக் கட்டுப்படுத்தினர்.
‘டி3’ என்பது ‘டெஸ்டிங்’, ‘டிராக்கிங்’ மற்றும் ‘டிரேசிங்’ என்பதன் சுருக்க வடிவம்.வீடு தேடிச்சென்று அனைவருக்கும் பரிசோதனை செய்வது, பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால்,அந்த நபரையும் அவரோடு தொடர்புகொண்டவர்களையும் கட்டாயமாகத் தனிமைப்படுத்துவது, தொற்றாளர் கடந்த 2வாரங்களில் எங்கெல்லாம் சென்றார் என்பதைக் கண்டறிந்து அவரோடு பயணித்த,அவரைச் சந்தித்த நபர்களையும் தனிமைப்படுத்துவது போன்ற வழிமுறைகளைக் கடுமையாகக் கடைபிடித்ததால், அந்த நாடுகளில் இரண்டாம் அலை தோன்ற வில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fF3swU
0 Comments