
பல்லடம் பகுதியில் போலி விதை விற்பனையால் சின்ன வெங்காயம் பயிரிட்டு அறுவடைக்கு காத்திருந்த விவசாயிகளின் தோட்டத்தில் பெரிய வெங்காயம் விளைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம், பொங்கலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சின்ன வெங்காய சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கள்ளிப்பாளையம், வாவிபாளையம், குள்ளம்பாளையம், கெரடமுத்தூர் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பொங்கலூர் அருகே கள்ளிப்பாளையத்தில் உள்ள தனியார் உரக்கடையில், 51 கிலோ சின்ன வெங்காய விதையை வாங்கி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பயிரிட்டனர். இதில் பலரது தோட்டத்தில் பெரிய வெங்காயம் விளைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/359VmY4
0 Comments