
பத்திரப் பதிவுத் துறையில் பொதுமக்கள் புகார்களைத் தெரிவிக்க புதிய கட்டுப்பாட்டு அறை விரைவில் அமைக்கப்படும் என பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை திருமலைநாயக்கர் மகால் அருகேயுள்ள மாவட்ட பத்திரப் பதிவு அலுவலர் அலுவலகத்தில் அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் ஜூன் 7 முதல் பத்திரப் பதிவு நடக்கிறது. பதிவு அலுவலகத்தில் இடைத்தரகர்கள் இல்லாமல் சரியான கட்டணத்துடன் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஆவணங்களைப் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/352R3xQ
0 Comments