
கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சரிவில் இருந்து மீள தொழில் வளர்ச்சிக்கான அடுத்தகட்ட திட்ட மிடலை மேற்கொள்ளாவிட்டால், கரோனா பாதிப்பு குறைந்த பிறகு திருப்பூரில் பல தொழில் நிறுவனங்கள் திறக்கப்படாமலேயே போகும் அபாயம் உள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆடை உற்பத்தித் துறையில் பின்னலாடை உற்பத்தியில் சர்வதேச கவனம் பெற்றது திருப்பூர் பின்னலாடை துறை. ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வரை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மேற்கொண்டு வந்த நிலையில், கரோனா தொற்று பரவலால் வர்த்தகத்தில் ஏற்ற,இறக்கங்களை சந்தித்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uRXA9i
0 Comments