
திருப்பூரில் திருமணத்தை எளிமையாக நடத்தி, திருமணத்துக்கு செலவு செய்ய ஒதுக்கி வைத்திருந்த ரூ.37.50 லட்சத்தை மணமகன் குடும்பத்தினர் கரோனா நலப் பணிகளுக்கு வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொங்கு மண்டலத்தில் செல்வந்தர்கள், திருமணங்களை திருவிழா போல நடத்துவார்கள். தற்போது கரோனா ஊரடங்கால் கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்தக் கொண்டாட்டங்கள் பெரிதாக இல்லை. இந்நிலையில், திருப்பூர் கரட்டாங்காட்டைச் சேர்ந்த தொழிலதிபர் அருள்செல்வம் - மஞ்சுளா தம்பதி, தங்களது மகனின் திருமணத்துக்கு ஒதுக்கி வைத்த தொகையில், ரூ. 5 லட்சம் மட்டும் செலவு செய்துவிட்டு, எஞ்சிய தொகையான ரூ.37.50 லட்சத்தை கரோனா நலப் பணிகளுக்கு வழங்கியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3zE6jzw
0 Comments