
பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்து மீறல்களில் ஈடுபட்டதாக சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரின் செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது பெண் சீடர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேளம்பாக்கத்தில் இயங்கும் சுஷில் ஹரி பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார். இவர் தனது பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் அத்துமீறி நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சிவசங்கர் பாபா மற்றும் அவரதுபள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3zCqn50
0 Comments