https://ift.tt/3xUfZnG

வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவரை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக பாமக மாநில துணை பொதுச் செயலாளரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மருத்துவக்குடியைச் சேர்ந்தவர் ம.க.ஸ்டாலின். வன்னியர் சங்க மாநில துணைத் தலைவராக உள்ளார். இவரது தம்பி ம.க.ராஜா, சென்னையில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக கும்பகோணத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்குத் தொடர்பாக, திருவிடைமருதூரைச் சேர்ந்த ரவுடி லாலி மணிகண்டன் உள்ளிட்டோரை திருவிடைமருதூர் போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2U3jKbJ

Post a Comment

0 Comments