ஸ்ரேயாஷ் - ஜடேஜாவின் அதிரடி: இலங்கையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி

தர்மசாலா: இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்திய அணி தரப்பில் ஸ்ரேயாஷ் ஐயர் மற்றும் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாடி வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 ஆட்டம், 2 டெஸ்ட் போட்டிகள்கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. லக்னோவில் நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி வெற்றியை ருசித்த நிலையில் இன்று இரண்டாவது டி20 ஆட்டம், எழில்மிகு தர்மசாலா மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments