
மதுரை: ‘நம்மைக் காக்கும் 48’ திட்டத்தில் சிகிச்சைப் பெற முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை கேட்பதால், அனைவராலும் இந்த திட்டத்தில் சிகிச்சைப்பெற முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அரசு மருத்துவமனைகளுக்கு இந்த திட்டத்தால் கிடைக்கும் வருவாயும் குறைந்துள்ளது.
சாலை பராமரிப்பில் ஏற்படும் குறைபாடுகளை களைவதற்கும், சாலை விபத்துகளை அறிவியல் பூர்வமாக தடுக்கவும் மாநில நெடுஞ்சாலைத்துறையும், காவல்துறையும், உள்ளாட்சி அமைப்புகளுடன் கைகோர்த்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அவை ஒரளவு கைகொடுத்தாலும், விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை முழுமையாக தடுக்க முடியவில்லை. இதனால் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை முழுமையாக தடுக்க முதல் 48 மணி நேர அவசர சிகிச்சை செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ளும் வகையிலும் ‘நம்மைக்F காக்கும் 48’ என்ற மருத்துவத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தினை கடந்த டிசம்பர் மாதம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sxZgpiT
0 Comments