IPL 2022 அணி அலசல் | ஷேன் வார்ன் செய்த மேஜிக்கை மீண்டும் நிகழ்த்துமா ராஜஸ்தான் ராயல்ஸ்?

இந்தியன் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் ஐபிஎல் தொடர் 2008-ல் அறிமுகமானபோது இருந்த எட்டு அணிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் மட்டுமே பயிற்சியாளரேயே கேப்டனாக களமிறக்கியது. அவர், சமீபத்தில் மரணம் அடைந்த ஷேன் வார்ன். அவரின் தலைமையில் முதல் சீசனில் சாம்பியன் ஆன ராஜஸ்தான் ராயல்ஸ், இன்று அவரை இழந்துள்ளது. ஐபிஎல்லில் ஷேன் வார்ன் விளையாடிய ஒரே அணி ராஜஸ்தான் மட்டுமே.

முதல் சீசனில் கோப்பை வென்ற ராஜஸ்தான் அணி அதன்பிறகு கோப்பைக்கு பக்கம் கூட செல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால், 2008-ல் கோப்பையை கைப்பற்றிய பிறகான 13 சீசன்களில் மூன்று முறை மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. கடைசியாக 2018ல் பிளே ஆஃப் சென்ற அந்த அணி கடந்த சீசன்களாக மோசமான பெர்பாமென்ஸை வெளிப்படுத்தியுள்ளது. 2019ல் ஏழாவது இடத்தையும், 2020ல் கடைசி இடத்தையும் பெற்ற அந்த அணி 2021ல் மீண்டும் ஏழாவது இடத்தையே பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments