https://ift.tt/ET75PBk

கரூர்: கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி பரத நாட்டிய ஆசிரியைக்கு, பரத நாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் அத்துமீறியதாக எழுந்த புகார் குறித்து, கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியம் மற்றும் வட்டாட்சியர் பன்னீர்செல்வம் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த பிரபல நாதஸ்வர வித்வானின் பேத்தி அந்த பெண்மணி. பாரம்பரியமான இசைக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் பரதநாட்டிய ஆசிரியை. இவரது கணவர் அரசு பணியில் உள்ளார். இவர்களுக்கு திருமண வயதில் ஒரு மகன் உள்ளார். 23 ஆண்டுகள் பரத நாட்டிய ஆசிரியையாக பணியாற்றி வரும் அந்த பெண்மணி, கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் பணியாற்றி வருகிறார். மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கு பிப்.28-ம் தேதி காலையில் அறிவுரைஞர் ஜாகிர் உசேன் ஆய்வு செய்தவதற்கு வந்துள்ளார். அப்போது அவர் பரதநாட்டிய ஆசிரியையிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8CDcIak

Post a Comment

0 Comments