
சென்னை: நிர்பயா நிதியின் கீழ் சென்னை மாநகராட்சியில் 692 இடங்களில் புதிய தெரு விளக்குகள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
நிர்பயா நிதியின் கீழ் பாதுகாப்பான நகரங்கள் திட்டத்தை செயல்படுத்த டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், அகமதாபாத், லக்னோ ஆகிய நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதன்படி சென்னை பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ரூ.425.06 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 60 சதவீத நிதியான ரூ.255.03 கோடியை மத்திய அரசும், 40 சதவீத நிதியான ரூ.170.03 கோடியை மாநில அரசும் வழங்கி உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gkpZQxN
0 Comments