https://ift.tt/51WULea

சேலம்: ‘திராவிட மாடல்’ஆட்சி குறித்து விரிவான விளக்கம் அளித்துள்ள முதல்வர் ஸ்டாலின், “திராவிட மாடல் என்பது எதையும் இடிக்காது... உருவாக்கும்; எதையும் சிதைக்காது... சீர்செய்யும்; யாரையும் பிரிக்காது... அனைவரையும் ஒன்று சேர்க்கும்; யாரையும் தாழ்த்தாது... அனைவரையும் சமமாக நடத்தும்” என்றார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற, "ஓயாத உழைப்பின் ஓராண்டு" என்ற தலைப்பிலான அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, திராவிட மாடல் ஆட்சி குறித்து அளித்த விளக்கம்: “அனைவருக்குமான ஆட்சி இது. அனைவருக்கும் பயனளித்துக் கொண்டிருக்கும் ஆட்சி இது. அனைவருக்கும் பயனளிக்கப் போகும் ஆட்சி இதுதான். இது எனது அரசு என்று நான் எப்போதும் சொன்னதில்லை. இது நமது அரசு என்றுதான் நான் தொடர்ந்து கூறி வருகிறேன். இந்த ஆட்சியை நான் மட்டும் நடத்தவில்லை. நாம் அனைவரும் சேர்ந்துதான் நடத்திக் கொண்டிருக்கிறோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9VQeAd0

Post a Comment

0 Comments