https://ift.tt/ziqx90X

ராமேசுவரம்: ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரூ.120 கோடி மதிப்பிலான சீராமைப்பு பணிகளை பிரதமர் மோடி இன்று மாலை காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (வியாழக்கிழமை) மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரூ.120 கோடி மதிப்பிலான சீராமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதற்காக ராமேசுவரம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், ராமேசுவரம் நகராட்சித் தலைவர் நாசர்கான், மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ் பாபு, சென்னை கட்டுமான பிரிவு முதன்மை பொறியாளர் வி.தவமணி பாண்டி, கட்டுமான பிரிவு இணை முதன்மை பொறியாளர் ரதி, மதுரை கோட்ட பொறியாளர் ஹிருதயேஷ் குமார், சென்னை கோட்ட வர்த்தக மேலாளர் மோகனப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rJz1A0k

Post a Comment

0 Comments