
வேல்ஸ்: பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை உக்ரைன் அணி இழந்துள்ளது. ரஷ்யா படையெடுத்து உக்ரைன் மீது போரிட்டு வரும் நிலையில் அந்த அணி உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் பங்கேற்றிருந்தது.
வரும் நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரையில் FIFA கால்பந்து உலகக் கோப்பை கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. 32 நாடுகள் இந்தத் தொடரில் விளையாடுகின்றன. இந்தத் தொடர் மொத்தம் 8 மைதானங்களில் நடைபெற உள்ளது. இதுவரையில் மொத்தம் 30 அணிகள் இந்தத் தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளன. ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தின் உலகக் கோப்பை தகுதிக்கான இரண்டாவது சுற்றில் விளையாடி இருந்தது உக்ரைன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments