https://ift.tt/RmKxbEG

சென்னை: திருப்பூர் மசூதி விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்ட திருப்பூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திருப்பூரில் அனுமதியின்றி, சட்ட விரோதமாக கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தில் இயங்கி வந்த மசூதியை மூட வேண்டும்; அங்கு தொழுகை நடத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன் அடிப்படையில், வருவாய்த் துறை அதிகாரிகள் இன்று அந்த கட்டிடத்திற்கு சீல் வைக்கச் சென்றபோது, இஸ்லாமியர்கள் பலர் ஒன்றாக திரண்டு வருவாய் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளை தடுத்ததோடு, திருப்பூரின் மைய சாலைகள் பலவற்றை மறித்து பொதுமக்களுக்கு மிகப் பெரிய இடையூறு செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KNkdOBj

Post a Comment

0 Comments